வில்லனாக அவதரித்து கதாநாயகனாக விஸ்வரூபம் எடுத்து வெற்றி நடைபோட்டு வரும் ஜீவன் தற்போது பயணிகள் கவனத்திற்கு என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். read more
டைரக்டர் முமைத் கான்! [ 1. Dec. 2007 - 07:04]
துண்டு துக்கடா துணியோடு இதுவரை கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட ஆட்டம் போட்ட முமைத் கான் அடுத்து, தொப்பி அணிந்து கொண்டு டைரக்ட் பண்ணப் போகிறாராம்.மும்பையிலிருந்து வந்த புயல் என்றாலும் கூட திருச்சி பக்கம்தான் முமைத் கானுக்கு சொந்த ஊராம். read more
நவ. 30 மெகா ரிலீஸ் [28. Nov. 2007 - 04:47]
வருகிற வெள்ளிக்கிழமை, அதாவது நவ. 30 தமிழ் சினிமாவுக்கு மினி தீபாவளி. அன்று மட்டும் நான்கு புதிய திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.ஆர்யா, பூஜா நடிப்பில் தயாராகி, நீண்ட நாட்கள் வெயிட்டிங்கில் இருந்த 'ஆட்டோ' படம் 'ஒரம்போ' என்ற பெயருடன் நவ. . 30 திரைக்கு வருகிறது.
இடா பிலிம்ஸ் சார்பில் ராஜா தயாரித்துள்ள படம் 'ராமேஸ்வரம்'. ஜீவா, பாவனா நடித்துள்ளனர். இலங்கை அகதி பற்றிய படமிது. எஸ். செல்வம் இயக்கியுள்ளார். வரும் 30ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் படத்தை தடை செய்ய கோரி, பைனான்சியர்கள் ஏழுமலை, சதீஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
கலை நிகழ்ச்சியால் சினிமாவை ஒதுக்குகிறார் மேக்னா [28. Nov. 2007 - 04:41]
சரத்குமாருடன் 'வருவான்', அப்பாஸடன் 'சந்திரிகா''படங்களில் நடித்து வருகிறார் மேக்னா நாயுடு. அவர் கூறியதாவது: 'வருவான்' படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 'சந்திரிகா' படம் தொழிலதிபர்கள் பற்றிய கதை. இதில் 'கார்ப்பரேட்' இந்தி படத்தில் பிபாஷா பாசு ஏற்றது போல பெரிய நிறுவனத்தின் நிர¢வாக இயக்குனர¢ வேடம். படத்தின் கதை முழுவதும் என்னைச் சுற்றித்தான் நடக்கிறது.
தமிழில் தனது 2வது இன்னிங்ஸை தொடங்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் சிம்ரன், கருணாஸுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம்.முதல் இன்னிங்ஸில் வெளுத்துக் கட்டியவர் சிம்ரன். ஆனால் கல்யாணமாகி, குழந்தையும் பெற்று திரும்பி வந்த அவர் 2வது இன்னிங்ஸை ஆரம்பிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.
மீண்டும் அகத்தியன் திரைக்களம் இறங்கியுள்ளார். நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற பெயரில் அவர் இயக்கும் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. விடுகதை, காதல் கோட்டை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் அகத்தியன். read more
தெலுங்கில் ஒளிரும் ஜோதிர் [25. Nov. 2007 - 16:13]
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த ஜோதிர்மயி இப்போது சத்தம் போடாமல் தெலுங்கில் இரண்டு படங்களில் திறமை காட்டிக் கொண்டிருக்கிறார். மலையாளத்திலும், தமிழிலும் தலா ஒரு படத்தில் தலை காட்டி வருகிறாராம். read more
நான் பெரியார் படத்தில் நடித்த பிறகு தான் பொது மக்களுடைய கவனம் என்மீது திரும்பியது [20. Nov. 2007 - 03:20]
நான் பெரியார் படத்தில் நடித்த பிறகுதான் மற்றவர்களுடைய கவனமும், மக்களுடைய கவனமும் என் மீது திரும்பியது என்று நடிகர் சத்யராஜ் பேசு கையில் கூறினார். சென்னை - பெரியார் திடலில் 13-11-2007 அன்று நடைபெற்ற எம்.ஆர். ராதா, பாவலர் பாலசுந்தரம் ஆகியோரின் நூற்றாண்டு விழாவில் நடிகர் சத்யராஜ் ஆற்றிய உரை வருமாறு: