மீண்டும் படகேறும் பழ.நெடுமாறன்! [ 8. Aug. 2007 - 16:48]
தமிழீழ மக்களின் போராட்டத்திற்காக உணர்வோடு குரல் கொடுக்கின்ற அமைப்புக்கள் பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையில் அதிரடியான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருக்கிறார்கள். யாழ் குடாவிற்கான பாதை நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள நிலையில் தேவையான அளவு உணவுப் பொருட்கள் இன்றி யாழ்ப்பாண மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த மக்களிற்காக தமிழ்நாட்டு தமிழர்கள் அன்போடு கொடுத்த உணவுப் பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதற்கு இந்திய அரசு அனுமதி மறுத்து வருகிறது. கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசும் இப் பிரச்சனையில் அக்கறை இன்றிக் காணப்படுகிறது.
வான்புலிகள் - திடுக்கிடும் தகவல்கள் அடங்கிய இரகசிய அறிக்கை! சிங்கள அரசு நடுக்கம்! [ 6. Aug. 2007 - 06:33]
தமிழீழ வான்படை பற்றி சில தினங்களுக்கு முன்னர் சிங்கள அரசாங்கத்திற்குக் கிடைக்கப்பெற்ற ஒரு இரகசிய அறிக்கை படைத்துறைத் தளபதிகள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இலங்கையின் முக்கியமான ஒரு நட்பு நாடு (இந்தியாவாக அல்லது அமெரிக்காவாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது) இந்த அறிக்கையை இலங்கை அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்துள்ளது. தனது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினால் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அந்த இரகசிய அறிக்கையை குறிப்பிட்ட அந்த நேச நாடு தயாரித்திருந்ததாக கூறப்படுகின்றது.
விடுதலைப் புலிகளின் புதிய தாக்குதல் படைவலுச் சமநிலையை மாற்றலாம்: கொழும்பு ஊடகம். [ 5. Aug. 2007 - 06:21]
தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிந்த அல்லது தற்காப்பு சமரானது தென்னிலங்கையில் அரசியல் வீழ்ச்சியை ஏற்படுத்துவதுடன், அது போரில் படைவலுச் சமநிலையையும் மாற்றலாம் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "தி நேசன்" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:
பெரும் செலவுகளுடன் சிறிலங்கா வான்படை நவீன மயம்: ஜேன்ஸ் பாதுகாப்பு சஞ்சிகை. [ 5. Aug. 2007 - 06:16]
சிறிலங்கா வான்படையினர் 7 பில்லியன் ரூபாய்களை தமது கொள்வனவுகளுக்காக இந்த வருடத்தின் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் செலவிட உள்ளனர் என ஜேன்ஸ் பாதுகாப்பு வர சஞ்சிகை இந்த வாரம் தெரிவித்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ஸவை பலவீனப்படுத்தும் மேற்குலகம் - தமிழர் தரப்பை குறிவைத்து நடவடிக்கை! [ 3. Aug. 2007 - 10:10]
சிறிலங்காவின் அரசியல் நிலை கடந்த சில வாரங்களாக மிகப் பரபரப்பாகக் காணப்படுகிறது. சிறிலங்காவின் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்கட்சிகள் தமது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. மகிந்தவின் அரசை கவிழ்க்கின்ற வேலைகள் திடீரென்று வேகம் எடுத்துள்ளன.
சமாதானத்தை ஏற்படுத்த வந்தோமா அல்லது போர்புரிய வந்தோமா? [ 3. Aug. 2007 - 10:01]
மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் ஏற்படாதவரையில் எவ்வித இராணுவ நடவடிக்கையும் முழுமையான வெற்றியை அளிக்காது. அரசியல் செயன்முறைகள் இன்றி நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் எதிர்பார்க்கும் இலக்கை அடையாது என்று இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனைப் பற்றி இந்தியா புரிந்துகொள்ளாதது தவறானது: "றோ" முன்னாள் தலைவர் ஏ.கே.வர்மா ஒப்புதல்! [ 3. Aug. 2007 - 06:56]
தமிழ் மக்கள் சார்பாக ஒரு தீர்மானத்தை எடுக்கக்கூடிவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சிங்களத் தலைமைகள் மாற்றியிருந்ததை இந்தியா புரிந்துகொள்ளாதது தவறானது என்று இலங்கையில் இந்திய அமைதிப்படை இருந்த காலத்தில் இந்திய உளவு அமைப்பான "றோ"வின் தலைவராக இருந்த ஏ.கே.வர்மா ஒப்புக்கொண்டிருக்கிறார்.
"சுதுமலைப் பிரகடனம் - இருபது ஆண்டுகள் சுட்டும் நிதர்சனம்" [ 1. Aug. 2007 - 18:39]
1987 ஆம் ஆண்டு. ஆகஸ்ட் மாதம்; நான்காம் திகதியன்று அதாவது, இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் சுதுமலை என்ற ஊரில், முதன் முறையாகப் பகிரங்கக் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.
கிழக்கிலிருந்து புலிகள் வெளியேறுவதைத் தடுக்கும் சாத்தியமான இராணுவ பலம் கிடையாது: "லக்பிம" [29. Jul. 2007 - 15:22]
கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேறுவதைத் தடுக்கும் சாத்தியமான பலம் சிறிலங்கா இராணுவத்துக்கு கிடையாது என்றும் வெளியேறி வரும் விடுதலைப் புலிகளுக்கு உதவுவதற்காக பேராறு காட்டுப்பகுதியில் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி வீரர்கள் தரையிறக்கப்பட்டுள்ளனர் என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 12 வருடங்களுக்கு முன்பு சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் கலாச்சாரத் தலைநகரான யாழ்ப்பாணம் மீண்டும் தமிழர்களின் கைகளில் வர வேண்டும் என்ற ஏக்கம் நிறைந்த கனவு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.