சீதை அலறித் துடித்தாள். தீநாக்குகள் அவளை சுட்டன. "என்னை கொன்றுவிடாதீர்கள், நான் ஒரு பாவமும் அறியாதவள்" சீதை கதறினாள். ராமன் ஒரு குரூரச் சிரிப்போடு அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான். அரியாசனத்திற்காக சோரம் போன சுக்கிரீவனும் விபீடணனும் செய்வதறியாது தலைகுனிந்து நின்றனர்.
அவன் அந்த நடைபாதையில் இருந்த இருக்கை ஒன்றில் வானத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவனுடைய மனதிற்குள் ஆயிரம் கேள்விகளும் அச்சங்களும் கலகம் செய்து கொண்டிருந்தன. அவனிடம் நிரந்தர வதிவிட அனுமதி இல்லை. நிரந்தர வதிவிட அனுமதி இல்லை என்பதால் நிரந்தர வேலை இல்லை. நிரந்தர வேலை இல்லை என்பதால் வருவாய் போதுமானதாக இல்லை. வீட்டில் மனைவியுடன் அடிக்கடி சண்டைகளும் வர ஆரம்பித்து இருந்தன. ஊரில் இருந்து வருகின்ற கடிதங்களும் அவனுடைய மனச்சுமையை கூட்டுவதாகவே இருந்தன.
டென்மார்க்கில் தன்னை அம்மன் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்ற அபிராமி எனப்படும் லலிதா என்கின்ற பெண்மணியை கடவுள் என்று உண்மையிலேயே நம்புகின்ற பலர் ஐரோப்பாவில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவரை வாழும் தெய்வம், நடமாடும் தெய்வம் என்றெல்லாம் போற்றிப் புகழ்கிறார்கள். இப்படி இவர்கள் லலிதாவை நம்புவதற்கு என்ன காரணம்? ஆயிரக் கணக்காண தமிழர்களை முட்டாள்கள் ஆக்கி தன்னை நம்ப வைக்க லலிதாவால் எப்படி முடிந்தது? இந்தக் கேள்விகளுக்கான பதில் ஒன்றும் கடினமில்லை. தன்னை கடவுள் என்று சொல்கின்ற அனைத்து மோசடிப் பேர்வழிகளும் கையாளுகின்ற அதே வழியைத்தான் லலிதாவும் கையாளுகிறார்.
நெடுநேரமாகியும் மகள் வீடு திரும்பவில்லை. பொதுவாக இருட்டுவதற்கு முன்பே மகள் வீட்டிற்கு வந்து விடுவாள். ஆனால் இப்பொழுது நேரம் இரவு 10 மணியாகி விட்டது. மகளைக் காணமால் அவள் தவிக்கத் தொடங்கினாள். மெது மெதுவாக அச்சம் அவளைப் பற்றிக்கொண்டது. ஒரு சந்தேகத்தோடு மகளின் அறைக்குப் போனாள். மேசையில் ஒரு கடிதம்..
எமது தளத்தில் (webeelam.com) வெளிவந்த "ஏமாற்றுக்காரர்களின் ஊர்வலம்" என்ற கட்டுரை குறித்து பல தரப்பிடம் இருந்து நேரடியாகவும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் பலவிதமான கருத்துக்கள் வந்தன. அதில் பெரும்பாலான கருத்துக்கள் டென்மார்க்கில் தன்னை அம்மன் என்று சொல்லி பக்தர்களை ஏமாற்றி வரும் அபிராமியை பற்றியதாக இருந்தது.