இந்தியாவில் அரசமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு- அதற்கு விரோதமாகச் செயல்படுவதா? தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த பிரமுகரின் மரணத்துக்குக் கவிதாஞ்சலியா? என்று கேள்வி கேட்ட தமிழ்நாட்டின் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "முரசொலி" நாளேடு பதில் அளித்துள்ளது. முரசொலியின் நேற்று முன்தினம் (06.11.07) இல் வெளியான அச்செய்தி விபரம்:
சு.ப தமிழ்செல்வனின் உட்பட்ட 5 போராளிகளின் வீரச்சாவு குறித்து பற்றசுனா கட்சி ஆழ்ந்த அதிர்ச்சி. [ 7. Nov. 2007 - 10:20]
இது குறித்து நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும், பாஸ்க் தனியரசுப் போராட்ட இயக்கமான (Batasuna) பற்றசுனா கட்சி, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் உயிரைப் பறிதத்தன் மூலம், அமைதி வழியிலான தீர்வு முயற்சிகளில் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்~வின் அரசாங்கம் நேர்மையுடன் செயற்படவில்லை என்பது, நிரூபணமாகியிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது.
தமிழீழ விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்துவோர் அஞ்சும் வகையில் ஒரு எழுச்சி உருவாக வேண்டும்:கொளத்தூர் தா.செ.மணி வலியுறுத்தல். [ 7. Nov. 2007 - 09:49]
தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்துவோர் அஞ்சும் வகையில் ஒரு எழுச்சி உருவாக்கப்பட வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரவணக்க நிகழ்வுக்குத் தலைமை வகித்தும் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் படத்தை திறந்து வைத்தும் கொளத்தூர் தா.செ.மணி பேசியதாவது:
சென்னை சிறிலங்கா தூதரகம் மீது முற்றுகைப் போராட்டம்: கொளத்தூர் தா.செ.மணி உள்ளிட்டோர் கைது. [ 7. Nov. 2007 - 09:47]
தமிழீழ அமைதிப் பேச்சுக்குழுவின் தலைவர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் படுகொலையைக் கண்டித்து சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் மீது இன்று முற்றுகைப் போராட்டம் நடத்த முயற்சித்த பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழின உணர்வாளர்கள் கைது . இந்த முற்றுகைப் போராட்டத்தின் தொடக்கத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சிங்களத்தின் கொடுமைகளை அம்பலப்படுத்திய ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டபோது சர்வதேச சமூகம் கண்டித்ததா? ஏன் கண்டிக்கவில்லை? ஏனெனில் அவன் தமிழன். அதுதான் உண்மை.: இயக்குநர் சீமான் [ 7. Nov. 2007 - 03:15]
சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்க நிகழ்வில் அவர் பேசியதாவது:
சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகளை நிறுத்த வலியுறுத்தி தமிழகத்தில் கையெழுத்து இயக்கம்: பெரியார் திராவிடர் கழகம். [ 7. Nov. 2007 - 03:05]
சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கம் இராணுவ உதவிகள் வழங்குவதனை நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கத்தை பெரியார் திராவிடர் கழகம் தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் வீரவணக்க நிகழ்வில் இக்கையெழுத்து இயக்கம் தொடங்கப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சியை முறியடிக்க முனையும் ஜெயலலிதா. சுப்பிரமணியசுவாமி, கோமாளிப் பத்திரிகையாளர் சோ. ராமஸ்வாமி என்ற ஒரு சிறு கூட்டம். [ 6. Nov. 2007 - 03:16]
ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சமரச முயற்சிகளில் சர்வதேசம் எங்கும் சமாதானப் புறாவாகப் பறந்து சென்று அமைதி எத்தனங்களில் ஈடுபட்ட புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், கொடூர வான் வல்லூறுகளால் கோரமாக கொல்லப்பட்டுவிட்டார். இனத்தாலும், மொழியாலும், உணர்வாலும் ஈழத் தமிழர்களோடு தாய், சேய் போன்று தொப்புள் கொடி உறவு கொண்டுள்ள தமிழகம், இந்தக் கொடூரம் கண்டு கிளர்ந்து நிற்கின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகத் தமிழினத்தின் பிரியா விடையோடு விதைக்கப்பட்டார் நம் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன். [ 5. Nov. 2007 - 14:30]
வரலாறு காணாத அளவு மக்கள் அணிதிரண்டு வணக்கம் செலுத்த உலகத் தமிழினத்தின் பிரியா விடையோடு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வித்துடல் தூய விதைகுழியில் முழுப்படைய மதிப்புடன் இன்று விதைக்கப்பட்டது.
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை சிங்கள தேசம் வீழ்த்தியதற்கு பதில் என்ன?: ச.பொட்டு விளக்கம். [ 5. Nov. 2007 - 10:20]
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை சிங்கள தேசம் வீழ்த்தியதற்கு தமிழர்களின் பதில் என்ன என்பது குறித்து தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச. பொட்டு விளக்கம் அளித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் இறுதி வீரவணக்க நிகழ்வில் அவர் ஆற்றிய உரை:
ஈழத் தமிழர் அழிந்துபோக இந்தியா எவ்விதத்திலும் இடம் கொடுக்கக்கூடாது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். [ 5. Nov. 2007 - 05:22]
ஈழத் தமிழர் அழிந்துபோக இந்தியா எவ்விதத்திலும் இடம் கொடுக்கக்கூடாது என்று இந்திய ஆளும் மத்திய அரசின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவு வலியுறுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் உத்தியோகப்பூர்வ நாளிதழான "ஜனசக்தி" யில் எழுதப்பட்டுள்ள தலையங்கம்: